பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி ! ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை வெளியிடுகிறார். மேலும், தூத்துக்குடியில் 1032 கோடி செலவில் ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை ஆதிரை திருவிழாவில், வெளியிடுகிறார். அதன் பிறகு ,காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சாலையில் நடந்து சென்று மக்களை சந்திக்கிறார்.
இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. பிறகு, அவ் ஆலையத்தில், சாமி தரிசனம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, சில மணி நேரம் கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளார்.
பிறகு கோயிலில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சிகளையும், பிரதமர் பார்வையிட்ட பிறகு ராஜேந்திர சோழனின் உருவ நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறகு, ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து பகல் 2:30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தனி விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.