மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதளம் இன்று மூன்று லட்சம் வாசகர்களை தாண்டி உள்ளது. அது சமூக நலன் சார்ந்த எமது பத்திரிக்கைக்கு கிடைத்த வெற்றி. தவிர, கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இணையதளத்தில், மார்க்கெட்டிங் செய்து தான் வாசகர்களை கொண்டு வந்திருப்பார்கள்.

ஆனால், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இதுவரை நாம் எந்த மார்க்கெட்டிங்கும், இணையதளத்தில் செய்யவில்லை. மேலும், வியாபார நோக்கத்துடனோ, அல்லது அரசியல் கட்சி சார்ந்த நோக்கத்துடனோ, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நடத்தவில்லை.
இது முழுக்க, முழுக்க சமூக நலன் சார்ந்தது. இந்த தேச நலன் சார்ந்தது. இது பற்றி வாசகர்களுக்கும், நன்றாக தெரியும். மேலும், பொய்யான செய்திகள் நமது இணையதளத்தில் வராது. இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை என்பது அதிலும், சமூக நலன் பத்திரிகைகள் நடத்துவது மிகப்பெரிய போராட்டத்தில் இயங்கி வருகிறது. மேலும்,
இன்று கார்ப்பரேட் பத்திரிகைகளோடு போட்டி போடும் அளவில் மக்கள் அதிகாரம் இருப்பது வாசகர்களுக்கு தெரிந்த ஒன்று தான். அந்த செய்திகளுக்கும், இதற்கும் வேறுபாடு இருக்கும் என்பது வாசகர்களாகிய உங்கள் மனசாட்சிக்கு அது தெரியும். எனவே இந்த தளம், மக்களுக்கானது. மக்கள் நலனுக்கானது.
தவிர, இணையதளத்தில் பத்திரிகை நடத்துவது சாதாரண காரியம் அல்ல. இது கடும் போட்டியாளர்களை சந்திக்கும் இடம். இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால் வாசகர்கள் ஆகிய உங்கள் மனதில் மக்கள் அதிகாரம் இடம் பிடித்தால் மட்டும்தான், அது முடியும்.
எனவே, நான் கடந்து வந்த பாதையில் பத்திரிக்கை என்பது மனதின் மறக்க முடியாத வலி மற்றும் வேதனையானது. இதையும் தாங்கி இந்த சமூகத்திற்கு உண்மைகளை கொண்டு சேர்க்கும் மக்கள் அதிகாரம் பணிக்கு, இன்று வரை மத்திய, மாநில அரசின் ஆதரவு இதற்கு தந்து மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்க, ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இது மிகப் பெரிய பத்திரிக்கை துறைக்கு ஏற்பட்டுள்ள இழிவு மற்றும் அழிவு.மேலும்,
ஒரு அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தால் மட்டுமே, இதைப் பற்றி சிந்திப்பார்கள் .மேலும், மக்கள் நலனில் அக்கறை இல்லாவிட்டால், சமூக நலன், பத்திரிகைகளின் நலனில், அக்கறை இருக்காது. இதில் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, அதிகாரிகளும் அப்படி தான் இருப்பார்கள் . தவிர,
செய்தித்துறை! இது பற்றி தெரியாமல், இயங்குகின்ற ஒரு துறை. அது ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக, இயங்குகின்ற ஒரு துறை. ஆனால், பெயரை மட்டும் பார்த்தீர்கள் ஆனால், செய்தி மக்கள் தொடர்பு துறை என்று வைத்திருக்கிறார்கள். பெயருக்கும், அதற்கும், சம்பந்தமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும்,
இந்த ஆட்சியில் எதுவுமே மக்களுக்காக இல்லாத போது, எங்களுடைய சமூக நலன் பத்திரிகைகள் மட்டும் என்ன விதிவிலக்கா? இவர்களுடைய அரசியல் வியாபாரத்தில் சமூக நலன் பத்திரிகைகளுக்கு எப்படி நல்லது நடக்கும்? இருப்பினும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கு தொடர்ந்து அதிகாரிகள், நண்பர்கள் ஆதரவு கொடுப்பது, இந்த சமூக நலனில், அவர்களுக்கும் நிச்சயம் இதில் பங்கு உண்டு.
மேலும், நீதித்துறையை சார்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் வேலா ஸ்ரீ, மற்றும் சென்னை ஐகோர்ட் மூத்த வழக்கறிஞர் முத்துசாமி ஆகியோர் எமது பத்திரிக்கைக்கு ஆதரவு தந்து உதவுவது, இந்த சமூக நலனின் அவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. தவிர,
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் மக்கள் அதிகாரம் அடுத்த ஆண்டு சமூகப் பணியில் ஈடுபட்டு, சிறப்பான முறையில் செய்து வருபவர்களுக்கு! அது அதிகாரிகளாக இருக்கட்டும், அரசியல் கட்சியினராக இருக்கட்டும், நீதிபதிகளாக இருக்கட்டும், வழக்கறிஞர்களாக இருக்கட்டும், அதில், தகுதியானவர்களை தேர்வு செய்து, மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பிலும், எமது சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், பாராட்டுக்கள், மற்றும் விருதுகள் வழங்க முடிவு செய்துள்ளோம்.மேலும்,
அது சமூகப் பணியில் ஈடுபட்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், பணியாற்றி வரும் சேவைகள், பத்திரிக்கை துறை மற்றும் அரசியல் , குறித்த விழிப்புணர்வு நம் மக்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும்.மேலும், பணமே வாழ்க்கையாக, எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு மத்தியில் சமூக நலனுக்காக வாழ்பவர்கள யார்.....? என்பதை மக்களிடம் அடையாளப்படுத்துவோம், என்றும்! பத்திரிக்கை துறையில் சமூகத்தின் நீதிக்காக போராடும் மக்கள் அதிகாரம் ஏழை, நடுத்தர மக்களோடு, போராட்டங்களை தொடர்கிறது.மேலும், இந்த
போராட்டங்களுக்கு முக்கிய காரணம் ,எல்லாத்துறையிலும் போலிகள் மலிந்து விட்டது. உழைப்பே இல்லாமல், உண்மையே இல்லாமல், அது போட்டி போடுகிறது. இது கலிகாலத்தின் வேதனை.
மேலும், அந்தப் போட்டியிலும் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. தவிர, இந்த பத்திரிக்கை துறையைப் பற்றி ஆட்சியாளர்களுக்கு தெரியாது. விளம்பரப்படுத்துவது தான் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், பொய்களையும் ,தேவையற்ற செய்திகளையும், மக்களிடம் விளம்பரப்படுத்தி, மக்களுக்கு பயனில்லை. இந்த சமூகத்திற்கும், அது பயனில்லை. உண்மைகளை வெளிப்படுத்தினால் தான், சமூகத்திற்கு பயன் உண்டு.மேலும் வாசகர்களாகிய உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
