நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் இந்திய செயற்கைக்கோள்கள் - இஸ்ரோ தலைவர் நாராயணன்.

 

நாட்டின் எல்லைகளை செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியா கண்காணித்து வருகிறது என்ற தகவலை தேனி மாவட்டத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் நாட்டின் பாதுகாப்பு எல்லைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 

தவிர சந்திராயன் மூன்று வெண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக நிறுவி உள்ளோம். சந்திராயன் - 4 திட்டம் 9600 கிலோ எடை கொண்டது. சந்திராயன் - 3 திட்ட வெண்கலம் நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் மட்டும் தான் ஆய்வு செய்தது. 

அதை முறியடிக்கும் விதமாக சந்திராயன் - 4 திட்ட விண்கலம் நிலவில் இறங்கி மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்திராயன் - 5 திட்டம் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது பெரிய திட்டம். 


வரும் 2040ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதல மையத்தை அமைக்க உள்ளோம். 

குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ஏவுதல மையத்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்த திட்டத்திற்கு தேவையான 95 சதவீத இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. வரும் 2026 டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட்கள் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Popular posts
நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்
படம்
இந்தியாவுடன் ஆன போரில் பாகிஸ்தான் ஜெயித்ததாக அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு.
படம்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் நாட்டிற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தேசவிரோத சக்திகளை களையெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
நாட்டில் பிரிவினைவாத அரசியலை ஒழிக்க, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து கணக்கு, தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை சேர்த்தால்,அந்த சொத்துக்கள் நாட்டுடைமையாக்க சட்டம் கொண்டு வரப்படுமா? சமூக ஆர்வலர்களும், தேச நலன் விரும்பிகளும்!
படம்