நீதியரசர் கற்பக விநாயகம், தமிழில் கவிதை, இலக்கியம்,ஆன்மீகம், அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு படைப்பாளி…!

 

இந்தப் படைப்பாளியின் அழகில் வடித்த ஒரு கவிதை! அழகு தமிழில் அற்புத படைப்பானது.

அது மனித வாழ்க்கையில் அழகிற்கு அர்த்தம் சொல்லும் கவிதை…! இது அழகின் கவிதையா? அல்லது கவிதையின் அழகா? எது என்பது நம் உணர்வில் அது அழகு வடிவில் கலக்கும் போது இந்த கவிதையின் அழகு எப்படி?என்பதை படித்து அதன் அழகு சுவையை பருகுவோமா?

ஆடும் பொழுது மயில் அழகு
ஓடும் பொழுது மான் அழகு
தாவும் பொழுது முயல் அழகு
கூவும் பொழுது சேவல் அழகு
பாயும் பொழுது புலி அழகு
மேயும் பொழுது பசு அழகு

விடியும் பொழுது விண்ணழகு
மடியும் பொழுது அருவி அழகு
நடக்கும் பொழுது கால் அழகு
கடக்கும் பொழுது நதி அழகு
கொதிக்கும் பொழுது பால் அழகு

துதிக்கும்பொழுது பாடல் அழகு
வடிக்கும் பொழுது சோறு அழகு
குடிக்கும் பொழுது கூழ் அழகு
படிக்கும் பொழுது கம்பன் அழகு
வெடிக்கும் பொழுது பஞ்சு அழகு

வெட்டும் பொழுது வைரம் அழகு
கொட்டும் பொழுது முரசு அழகு
அணியும் பொழுது நகை அழகு
தணியும் பொழுது கோபம் அழகு
அரைக்கும் பொழுது சந்தனம் அழகு

உரைக்கும் பொழுது தங்கம் அழகு
நானும் பொழுது பெண்மை அழகு
நான் ஏற்றுகிற பொழுது வில் அழகு
நீராடும் பொழுது ஈரம் அழகு
போராடும் பொழுது வீரம் அழகு

காணும் பொழுது தாய்மை அழகு
பேணும் பொழுது ஒழுக்கம் அழகு
சிரிக்கும் பொழுது குழந்தை அழகு
தரிக்கும்பொழுது கர்ப்பம் அழகு
மெல்லும்பொழுது தாம்பூலம் அழகு

சொல்லும் பொழுது தமிழ் அழகு
உங்களுக்கு நான் அழகு
எனக்கு நீங்கள் அழகு
கம்பனுக்கு தமிழ் அழகு
தமிழுக்கு கம்பன் அழகு

- நீதியரசர் எம்.கற்பக விநாயகம்.

Popular posts
தமிழ்நாட்டில் உழைக்காமல், கோடீஸ்வரராக என்ன வழி? அரசியல் கட்சியா? சினிமாவா? அரசியல் திட்டம் போட்டு கொள்ளையடிக்கிற வேலையா?
படம்
மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால் வாழ்க்கையின் போராட்டங்கள்.... என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள்!
படம்
நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் டாஸ்மாக் ஊழல்! அமலாக்க துறையின் விசாரணை - விசாரணையில் டாஸ்மாக் .எம் டி. விசாகன்.
படம்
பட்டியலின சமூகத்தில் மதம் மாறியவர்கள் தெரிந்து மாறியிருந்தாலும், தெரியாமல் மாறி இருந்தாலும், ஜாதி மாறிவிடும் - அரசியல் சட்டம் .
படம்
உச்ச நீதிமன்றம்! நாட்டில் ஆயிரக்கணக்கான ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருந்தால்!ஊழலுக்கு மறைமுகமாக துணை போனால், நாட்டின் நிர்வாகம், நிதிநிலை, கேள்விக்குறியாகும் போது,இந்த சட்டத்தின் தீர்ப்புக்கள் நாட்டு மக்களின் வருமானம், தொழில், ஆகியவற்றை சரி செய்து விட முடியுமா?
படம்