குக் கிராமத்தில், வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நீதிபதி சிவராஜ் பாட்டில் தினமும் 35 கி.மீ.மாட்டு வண்டியில் பயணித்து பள்ளி படிப்பு தொடர்ந்தவர் எப்படி அதை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று முடித்தார் ? என்பதுதான் சிவராஜ் பாட்டில் தன்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ள சாராம்சம்! கடந்த நேரமும், நடந்த தூரமும் .
மதுரையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவராஜ் பாட்டில் மற்றும் கற்பக விநாயகம் இருவரும் 80 வயதுகளை கடந்தும், அவர்களின் சமூக பங்களிப்பு அடுத்த தலைமுறைக்கு அது முக்கியத்துவ ஆகிறது.ஆனால், அறிவற்ற சமுதாயம் அரசியலில் 10 தலைமுறைக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவிக்கிறது. அவர்களுடைய பங்களிப்பு ஓய்வு பெற்ற பின்பும், சமூகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அறிவார்ந்த மக்களால் நிரூபிக்கப்பட்டது.
மதுரை கலைஞர் நூற்றாண்டு அரங்கிலே !அதற்கு இவ்வளவு கூட்டமா? என்று பேசும் அளவில் அந்த அரங்கத்தில் மாணவர்களும், பொது மக்களும், நீதித்துறையை சார்ந்தவர்களும், வந்து இருந்தனர். இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள்.மேலும்,


கடந்த நேரமும், நடந்த தூரமும், என்ற நூல் வெளியீட்டு விழாவில் சமூகத்தில் அவருடைய பங்களிப்பு என்ன? என்பது குறித்து மாணவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.மேலும், இன்றைய மாணவர்கள் நாளைய சமுதாயத்தை உருவாக்குபவர்கள். அவர்கள் குடும்ப சூழ்நிலை, எப்படி இருந்தாலும், அதை மாற்றி உழைத்து, உழைப்பால் முன்னேறி வரவேண்டும் என்பதற்கு உதாரண புருஷர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவராஜ் பட்டேல் மற்றும் கற்பக விநாயகம். இந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல, வருங்கால இளைய தலைமுறைகளுக்கும், அவர்களுடைய வாழ்க்கை உதாரணமானது.

அதுதான் அவர்கள் கடந்த நேரம், நடந்த தூரம், இதைப் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேசும்போது குறிப்பிட்டார். காலம் என்பது மிகவும் முக்கியமானது. காலத்தை நாம் தொலைத்து விட்டால், மீண்டும் அது கிடைக்காது. அப்படிப்பட்ட முக்கியத்துவமான கால நேரத்தை பயன்படுத்தி நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவது தான் வாழ்க்கை.

சிவராஜ் பாட்டில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ஒரு மாட்டு வண்டியில் ஆரம்பித்து, இன்று உச்ச நீதிமன்றம் வரை, அவர் வாழ்க்கையை கொண்டு சென்று முடித்திருக்கிறார். அந்த முடிவு நீதிமன்றத்தில், இருப்பினும், சமூகத்தில் அவருடைய பங்களிப்பு என்ன? இவரால் எத்தனையோ பல நல்ல காரியங்கள் அவருடைய பங்களிப்பு சிவராஜ் பாட்டில் பவுண்டேஷன் அறக்கட்டளை மூலமாக என்னென்ன? நல்ல காரியங்கள் மக்களுக்கு செய்து வருகிறார்கள்? என்பது படமாக காண்பிக்கப்பட்டது.
மேலும், அதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அங்கத்தினர்களும், எந்த எதிர்பார்ப்பும் என்று அந்த அறக்கட்டளையில் பணியாற்றி வருகிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு நீதிபதியாக ,நீதித்துறையில் ஓய்வு பெற்ற பிறகும், சமூகத்திற்கு அவருடைய சேவைகள் என்பது மிகவும் பாராட்டுக்கு உரியது.

அதேபோல், அங்கு வந்திருந்த மக்களுக்கும், மாணவர்களுக்கும் நீதிபதி கற்பக விநாயகம் அவர்கள் " "நாளும் ஒரு நற் சிந்தனை "என்ற நூலை பரிசளித்தார்.நீதிபதி கற்பக விநாயகம் அவரும் நாளும் ஒரு நற்சிந்தனை என்ற நூலை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?இதையெல்லாம் எதற்காக நீதிபதிகள் செய்ய வேண்டும்? விளம்பரத்திற்காகவா? அல்லது புகழுக்காகவா? எதுவுமே தேவையில்லை. அவர்களிடத்தில் எல்லாமே இருக்கிறது. அவர்கள் எப்படி உருவானார்கள்? அவர்களால் சமூகத்திற்கு….?
இதுதான் நாளைய சமூகத்திற்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, கொடுத்துவிட்டு போகும் அனுபவ சொத்து இது !மதிப்புமிக்க வரலாற்றில், இதன் பயன் என்ன?வென்று எழுதி வைத்துவிட்டு போகிறார்கள். அதுதான் நாளை இளைய மாணவ ,சமுதாயத்திற்கு அதன் பயன்கள் போய் சேர வேண்டும். அதுதான் முக்கிய நோக்கம். மேலும், அவர்கள்!
நாம் கடந்து வந்த பாதைகளே கஷ்டமானதாக இருந்தது. அந்த கஷ்டத்தை எல்லாம் எப்படி நாங்கள் எதிர்கொண்டோம்? வருங்காலத்தில் அதை எல்லாம் எதிர்நீச்சல் போட்டு நீதி துறையாக இருக்கட்டும், மற்ற துறைகளாக இருக்கட்டும், நாளைய சமுதாயம், தங்களை எப்படி கௌரவத்தின் அடையாளமாக மாற்றிக் கொள்ளப் போகிறது?இது ஒரு முக்கியமான வாழ்க்கையின் அடிப்படை அனுபவத்தின் கருத்து.
மேலும்,இந்த விஷயத்தைக் கூட அவர்கள் பாமர மக்களிடம் கொண்டு செல்லவில்லை. படித்த மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்கிறார்கள். இந்த நோக்கம் நாளைய சமுதாயம், நல்ல சமுதாயமாக வளர வேண்டும் .வர வேண்டும். வாழ வேண்டும். இதற்கு தான் இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதிகளின் சமூக பங்களிப்பு. அப்போதுதான் தெரிந்தது .
ஒவ்வொருவரும் நீதித்துறையில் எப்படி எல்லாம் இவர்கள் பங்களித்திருக்கிறார்கள்? இதனால் பயன்பெற்றவர்கள் ?. இவர்களால் காப்பாற்றி வாழ்வு கொடுத்தவர்கள்?. அந்த மேடையில் நீதிபதி சிவராஜ் பட்டேல் கௌரவிக்கப்பட்ட போது, தெரிந்தது .
அதேபோல், நீதிபதி கற்பக விநாயகம் அங்கு கௌரவிக்கப்பட்டபோது ,அவர்கள் சமூகத்தின் அடையாளமாக திகழ்ந்தார் என்பதை அங்கே எடுத்துக் காட்டப்பட்டது. நான் மேடையிலே நீதிபதி கற்பகம் விநாயகம், அவர் அருகிலே நின்று கொண்டிருக்கும் போது ஒருவர் தன்னை நான் தான் அய்யா வைகுண்டராஜன் என அடையாளப்படுத்திக் கொள்கிறார்.அப்போது நான் கேட்டேன், நீங்கள் நியூஸ் 7 ஓனர் தானே ஆமா என்றார். அவர் மறந்து விட்டார். ஐயா இல்லை என்றால், நான் ஒரு வழக்கில் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பேன் என்னை காப்பாற்றினார்.
இதை ஏன் சொல்கிறேன்? என்றால்! நீதித்துறையில், நீதிபதிகள் எவ்வளவு முக்கியத்துவமானவர்கள்? அவர்கள் சமூகத்தில் நீதியை நிலைநாட்டுவது மட்டுமல்ல, தற்போது அரசியலிலும், நீதியை நிலைநாட்டுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்று ஊழல்வாதிகளை காப்பாற்றினால் நாட்டுக்கு ஆபத்து. சமூகத்திற்கு ஆபத்து.
அதேபோல் நாங்கள் பத்திரிக்கையில் அவர்களை நல்லவர்கள் என்றும், வல்லவர்கள் என்றும்,நேர்மையானவர் என்று பாராட்டி எழுதினால்! அது சமூகத்திற்கு ஆபத்து. நாட்டிற்கு ஆபத்து. அப்படி எழுதக்கூடிய பத்திரிகைகளுக்கு தான், இன்று பத்திரிக்கை என்று சலுகை ,விளம்பரங்கள் மத்திய மாநில அரசின் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதையெல்லாம் களை எடுக்கப்பட வேண்டும். இந்த பத்திரிக்கை துறையை நீதித்துறை தான் காப்பாற்ற வேண்டும். அந்த நிலைக்கு இன்று பத்திரிகைத்துறை இருந்து வருகிறது.
பத்திரிக்கை துறையில் பொதுநலத்துடன் செய்திகளை எத்தனை பத்திரிகை தொலைக்காட்சிகள் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்…..?மேலும்,
பத்திரிகையின் சுயநலம், தனிப்பட்ட லாபம்….! இதுதான் இன்றைய 99 சதவீதம் பத்திரிக்கை துறையின் வியாபாரம். இதில் அரசியல் தலையீடு மீறி செய்திகள் சுதந்திரமாக வெளியிட முடியாது. என்பது அவர்கள் கருத்து.
இதை சொல்வது கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள். இவர்கள் மட்டும் மக்களின் வரிப்பணத்தில் பத்திரிக்கை தொலைக்காட்சி நடத்துவார்கள். ஆனால் இந்த சமூக நலனுக்காகவும் , ஊழலை எதிர்த்து போராடக் கூடிய பத்திரிகைகளாகவும் இருக்கக்கூடிய குறைந்த சதவீத பத்திரிகைகளுக்கு கூட இந்த சலுகை, விளம்பரங்கள் சர்குலேஷன் சட்டத்தால் ஏமாற்றி வருகிறார்கள்.
சர்குலேஷனுக்கு அர்த்தம் தெரியாத மத்திய மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகள் இந்த பத்திரிகை துறையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் சுயநலம் 30% கமிஷன் யார் தருவார்கள்? இல்லை என்று மறுத்தால் இதை சிபிஐ விசாரணை செய்யட்டும் அப்போது வெளிவரும். எதற்காக விளம்பரத்தை ஏஜென்ட்கள் மூலம் கொடுக்கிறார்கள்?
இந்த சமூகத்தின் நலன் தேசத்தின் நலன் இப்படிப்பட்ட பத்திரிகைகளுக்கு எது என்று ஆய்வு செய்து அதற்குத் தரவேண்டிய மதிப்பு மரியாதை என்று சமூகத்திற்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்க கூடிய பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு வருகிறது .
இதைதான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளம் தொடர்ந்து மத்திய மாநில அரசின் செய்தித் துறைக்கு எடுத்துச் சொல்லி வருகிறது. மேலும், சர்குலேஷன் என்ற சட்டம் இதை எப்படி தீர்மானிக்கிறது? இவர்கள் உடலை தான் பெரிதாக நினைக்கிறார்கள். உடலை விட உயிர் பெரிது. உயிர் இல்லாவிட்டால் அது பிணம். அந்த பிணத்தை வைத்து மத்திய மாநில அரசின் செய்தித்துறை கணக்கு காட்டுகிறார்கள்.
அதாவது செய்தியின் தரம், உண்மைத்தன்மை, சமூகத்திற்கு முக்கியத்துவம் ஆனது? எது தேசத்திற்கு முக்கியத்துவம் ஆனது? எது என்பதை பட்டியலிட்டு பத்திரிகையை ஆய்வு செய்யுங்கள் .அப்போதுதான் தெரியும்? உங்களுக்கு சர்குலேஷன் முக்கியமா? இல்லை பத்திரிகையின் செய்திகள் மக்களுக்கு முக்கியமா?
இதை வைத்து வியாபாரம் செய்யக்கூடிய பத்திரிகைகளுக்கு கொடுக்கக்கூடிய சலுகை, விளம்பரங்கள் என்று மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு ,இதனால் சமூகத்தின் பாதிப்புகள் என்ன? என்பதை எந்த பத்திரிகையாளர்களாவது, இதுவரை வெளிப்படுத்தி இருக்கிறார்களா? இல்லை எந்த பத்திரிக்கையாவது வெளிப்படுத்தி இருக்கிறதா?
மக்கள் அதிகாரம் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக,இதைப் பற்றி செய்தி துறைக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறது. இதில் பணியாற்றிய உயர்மட்ட அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். நான் எதையோ சொல்கிறேன் என்று இந்த செய்தியை படிக்கும் வாசகர்கள் நினைக்க வேண்டாம்.
ஏனென்றால், பத்திரிக்கை துறை இன்று சமூகத்தின் பங்களிப்பில் எப்படி நீதித்துறை முக்கியத்துவம் ஆனதோ அதேபோல் இந்த துறையும் முக்கியத்துவம் ஆனது. அதனால்தான் இப்படிப்பட்ட நீதி அரசர்கள் முன்னால் இந்த உண்மையை அவர்களிடம் எடுத்துரைக்கிறேன். இதை அவர்களால் நிச்சயம் மாற்றத்தை கொண்டு வர முடியும் .அது சமூகத்துக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். நீதிபதி கற்பக விநாயகம் பேசும் போது, மேடையிலே குறிப்பிட்டார். தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்த போது அவர் படித்த புத்தகம் சத்திய சோதனை அவரை காப்பாற்றியுள்ளது.
அவர் அன்று தற்கொலை செய்திருப்பாரானால்! இன்று நீதித்துறைக்கு இப்படி ஒரு நீதிபதி கிடைத்திருக்க மாட்டார். அவருடைய சமூக பங்களிப்பு நாட்டிற்கு கிடைத்திருக்காது. அதுபோல்தான் சமூகத்திற்கு பங்களிக்க கூடிய பத்திரிகைகள் எத்தனை? என்பதை மத்திய, மாநில அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால்! நீதித்துறை இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
அதாவது குற்றவாளிகளை நல்லவர்களாக வல்லவர்களாக பாராட்டுவது பத்திரிக்கை துறைக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். அதேபோல், ஒரு நீதிபதி குற்றவாளியை காப்பாற்றுவது நீதிக்கு தண்டனை. நிரபராதி குற்றவாளியாக்கப்பட்டால் சட்டம் அவரை குற்றவாளி என்றாலும், அவரை காப்பாற்றுவது நீதிக்கு பெருமை.
இதுதான் இரண்டுக்கும் உள்ள ஒரு தொடர்பு இப்படி பல பொய்யான தகவல்களை இன்று அரசியலில், அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் பத்திரிகையில் வியாபாரம் ஆக்கி,மக்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பது பத்திரிக்கை துறையின் வேலை அல்ல. அதற்கு மத்திய, மாநில அரசின் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிப்பது சமூகத்திற்கும், இந்த தேசத்திற்கும் எதிரானது.
எனவே, நல்ல கருத்துக்கள், உண்மைகள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கக் கூடிய இந்த நூல்! எவ்வளவு அவசியமானதோ, அதேபோல், உண்மைகள், தரமான செய்திகள், சமூக நோக்கத்திற்கான செய்திகள், வியாபார நோக்கம் இன்றி, பொதுநலத்துடன் கொடுக்கக்கூடிய பத்திரிகைகள், இந்த தேசத்திற்கு இந்த சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.மேலும்,
அரசியல் கட்சியினரின் அநியாயங்களையும், ஊழல்களையும், தவறான நிர்வாகங்களையும், மறைக்க அவர்களின் பொய்களையும், பேச்சுக்களை, மக்களிடம் நியாயப்படுத்துவதன் நோக்கம் என்ன? இதற்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது, செய்தித்துறை அதிகாரிகள் அதற்கு லஞ்சமா?என்பதை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மீண்டும், இது பத்திரிக்கை துறையின் பொதுநலமில்லை. சுயநலம் என்பதை செய்தித் துறைக்கு தெளிவான உண்மையின் விளக்கம்.
அதற்கும் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இது எப்படி நான்காவது தூண் ஆகும்?மேலும்,மக்களிடம் பத்திரிக்கை வாங்கி படிக்கும் எண்ணமே இல்லாமல் இன்று இணையதளத்தில் பத்திரிக்கையை படிக்கும் போது! மத்திய மாநில அரசின் செய்தி துறைகள் ஏன்? அதை ஒவ்வொரு பத்திரிக்கையின் இணையதளத்தையும் சர்குலேஷனில் கொண்டு வரக்கூடாது. இதுதான் கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் அரசியல் உள்நோக்கமா?
ஆயிரக்கணக்கில் அரசியல் கட்சிகள் இருக்கிறது. இருந்து என்ன பயன்? அவர்களுடைய சமூக பங்களிப்பு என்ன? அதேபோலத்தான், ஆயிரக்கணக்கில் பத்திரிகைகள் இருக்கிறது. அதன் தரம் என்ன? பத்திரிக்கை துறை ஆளும் கட்சியினரின் சுயநலமும், பத்திரிகை வியாபாரத்தின் வருமானமும், சமூகத்தின் சுயநலமா? அல்லது பொது நலமா? என்பதை அறிவார்ந்த சமுதாயம் இதை சிந்திக்குமா? மேலும், அதிக பக்கங்களையும், சர்குலேசனையும் வைத்து ஒரு பத்திரிகையை தீர்மானிக்கும் முட்டாள் தனமான முடிவு!
மத்திய மாநில அரசின் செய்தித்துறை கொள்கை முடிவை! அறிவார்ந்த சமுதாயம் இதை சிந்திக்குமா?இதுதான் அரசியலில் பொதுநலமா? அல்லது சுயநலமா? அதுமட்டுமல்ல, இந்த சர்குலேஷனில் வாரம் ,மாதம்,மாதம் இருமுறை, என்று வியாபாரத்தை அடிப்படையாகவே, பத்திரிக்கை துறையில் பத்திரிகையை தீர்மானித்திருக்கிறார்கள். இது கடந்த 50 ஆண்டு காலமாக இப்படித்தான் பத்திரிகை துறையை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக இந்த சட்டத்தை வகுத்திருக்கிறார்கள். இதனால், பிளாக் மணி இருப்பவர்கள் மட்டும்தான் பத்திரிகையே! நடத்த முடியும்.மேலும்,
சாமானிய மக்கள் நடத்தும் பத்திரிகைகள்! தகுதி இருப்பவர்களால் கூட, பத்திரிகையை நடத்த முடியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அந்த அளவிற்கு இதில் உள்ள அரசியல். இதையெல்லாம் மாற்றாமல் நாட்டு மக்களுக்கும், இந்த சமூகத்திற்கும், நிச்சயம் நேர்மையான அரசியல்! கிடைக்க வாய்ப்பே இல்லை.
நீதித்துறையில் வழக்குகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக, போலி பத்திரிகை பிம்பத்தின் அரசியல் அடையாளமே!அது பணம் தான் அரசியல் என்று தீர்மானித்து வைத்திருக்கிறது. மேலும்,கேரளா அரசியலை பாருங்கள், அங்கே தகுதியின் அடிப்படையில் அரசியல், சமூக நலனில் இருப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்,அதை போராடாமல் தீய சக்திகளை நாட்டில் ஆதரித்தால், பாமர மக்களின் வாழ்க்கை போராட்டமே!
இதைப் பற்றி நீதித்துறை ஆய்வு செய்தால்! உண்மை புரியும்.தவிர,
மக்கள் இந்த உண்மைகளை ஆழ்ந்து படித்து, உணர்ந்தாலே! நாட்டில் போலி அரசியலையும், போலி அரசியல்வாதிகளையும் ஒழிக்க முடியும்.
.jpeg)
.jpeg)