திமுக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மோடிக்கும் ஈடிக்கும் (E D) பயப்பட மாட்டேன், என்று சொன்னவர் சம்பந்தப்பட்ட இவர் நண்பர்களை ஏன்? வெளிநாட்டுக்கு அனுப்பினார்? - பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன்.

 தமிழ்நாட்டில் திமுக வீர வசனம் பேசுவது புதிதல்ல, இங்கே பேசிவிட்டு டெல்லியில் போய் மோடியிடம் நெடுக்க காலில் விழுவார்கள். விழுந்து பார்ப்பார்கள் நடக்குமா? நடக்காதா? என்று நடக்கவில்லை என்றால், உடனே சிகையை பிடிப்பார்கள். இதுதான் திமுக. இது அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும்.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் நான் ஈடிக்கும் பயப்பட மாட்டேன்,மோடிக்கும் பயப்பட மாட்டேன். உன்னை யார் பயப்பட சொன்னது? தப்பு செய்திருக்கிறாய் , அதனுடைய வெளிப்பாடு, மக்களிடம் மீசையில் மண் ஒட்டவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கக்கூடிய உதயநிதி அமலாக்க துறை சோதனைக்கு பயம் இல்லை என்றால் உங்களுடைய நண்பர்களை வெளிநாட்டுக்கு எதற்காக அனுப்ப வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வி?

மேலும், திமுகவிற்கு அதிமுக,பாஜக கூட்டணி மீது தேர்தல் பயம் வந்துள்ளது. அது ஒரு புறம் இருக்க, உதயநிதி பயத்தால் தன்னுடைய நண்பர்களை உடன் அழைத்துச் செல்லாமல் ஏன்? லண்டனுக்கு தப்பி செல்ல வேண்டும்? அது மட்டுமல்ல, பயமில்லை என்றால், அமலாக்கத் துறைக்கு ஏன் ஓடி ஒளியே வேண்டும்?

மேலும்,தமிழ்நாட்டில் பிஜேபி மக்களை சந்திக்கும் அரசியலாக இருக்கும். எல். முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை நடத்தினார். அண்ணாமலை தலைவராக இருந்தபோது, என் மண்,என் மக்கள் யாத்திரை நடத்தினார். என்னுடைய யாத்திரை, தமிழக சட்டப்பேரவைக்கு திரளாக பாஜக எம்எல்ஏக்களை அழைத்துச் செல்வதாக இருக்கும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதலிடம் பெறுவோம்.

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அமலக்கத்துறை சோதனைக்காக பிரதமர் மோடியை சந்தித்தார் என்ற விமர்சனம் சோசியல் மீடியாவில் வெளிவந்து கொண்டிருக்கிறது. பத்திரிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது பற்றி அவரிடம் கேட்டால் இன்னும் தெளிவாக சொல்வார். தவிர, நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதாக தெரிவித்து, பிறகு அதற்கு போகவில்லை என்று பத்திரிகை செய்தி, இப்படி இருக்கையில் முதல்வர் ஸ்டாலின் ஏன்? டெல்லி சென்றார்? என்பதை அவரிடம் கேட்டால் தெளிவாக சொல்வார் என நினைக்கிறேன்.மேலும்,

பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசி உள்ளார். அவர் சந்திப்பு அமலாக்கத்துறை சோதனையின் வெளிப்பாடாகத்தான் அது இருக்க வேண்டும் இவ்வாறு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Popular posts
தமிழ்நாட்டில் உழைக்காமல், கோடீஸ்வரராக என்ன வழி? அரசியல் கட்சியா? சினிமாவா? அரசியல் திட்டம் போட்டு கொள்ளையடிக்கிற வேலையா?
படம்
மக்கள் சிந்தித்து வாழ வில்லை என்றால் வாழ்க்கையின் போராட்டங்கள்.... என்னென்ன? இதில் பெரும் பங்கு,அரசியல், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், போலி சாமியார்கள், போலி வழக்கறிஞர்கள்!
படம்
நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் டாஸ்மாக் ஊழல்! அமலாக்க துறையின் விசாரணை - விசாரணையில் டாஸ்மாக் .எம் டி. விசாகன்.
படம்
பட்டியலின சமூகத்தில் மதம் மாறியவர்கள் தெரிந்து மாறியிருந்தாலும், தெரியாமல் மாறி இருந்தாலும், ஜாதி மாறிவிடும் - அரசியல் சட்டம் .
படம்
உச்ச நீதிமன்றம்! நாட்டில் ஆயிரக்கணக்கான ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருந்தால்!ஊழலுக்கு மறைமுகமாக துணை போனால், நாட்டின் நிர்வாகம், நிதிநிலை, கேள்விக்குறியாகும் போது,இந்த சட்டத்தின் தீர்ப்புக்கள் நாட்டு மக்களின் வருமானம், தொழில், ஆகியவற்றை சரி செய்து விட முடியுமா?
படம்